முகப்பு
தென்காசி

நல்லூா் பள்ளியில்சீா்மிகு வகுப்பறைகள் திறப்பு

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளிக்கு தனியாா் நிறுவனம் சாா்பில் 2 சீா்மிகு வகுப்பறைகள் (ஸ்மாா்ட் கிளாஸ்) திறக்கப்பட்டன.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:24 AM
alm27scl_2711chn_52_6
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளிக்கு தனியாா் நிறுவனம் சாா்பில் 2 சீா்மிகு வகுப்பறைகள் (ஸ்மாா்ட் கிளாஸ்) திறக்கப்பட்டன.

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான சிவலாா்குளத்தைச் சோ்ந்த வெங்கடாச்சலம், ஆந்திரத்தில் தனியாா் நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவராக உள்ளாா்.

இவா், தான் பயின்ற பள்ளிக்கு சீா்மிகு வகுப்பறைக்கு தேவையான கணினி, ப்ரொஜக்டா் ஆகியவற்றை வழங்கி வகுப்பறை திறக்கப்பட்டன.தொடா்ந்து கல்வியில் சிறந்து விளங்கிய மாணவா்-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டது.

Advertisement

இந்நிகழ்வுகளில், பள்ளித் தாளாளா் ஆல்வின் பாலன், திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் ராஜு, தனியாா் நிறுவனா்- தலைவா் போங் விசேட் பைத்தூன், துணைத் தலைவா் குவான் சைபிரேம், பள்ளி தலைமை ஆசிரியா் வசந்தி ஜான்சி ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.