தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் சோதனை
ரயில் நிலையங்களில் சோதனை
பாபா் மசூதி இடிப்பு தினத்தை (டிச. 6) முன்னிட்டு தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
தென்காசி ரயில்வே இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளா் கற்பகவிநாயகம் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் வி. கணேசன், தலைமைக் காவலா் ராஜேஷ், பாபு ஆகியோரைக் கொண்ட குழுவினா் இப்பணியில் ஈடுபட்டனா். வாகன நிறுத்துமிடம், பயணிகளின் உடைமைகள், தண்டவாளங்களில் சோதனை நடைபெற்றது.