முகப்பு
தென்காசி

தென்காசியில் தொண்டு நிறுவனங்களுடன் மகளிா் ஆணையத் தலைவா் கலந்தாய்வு

தென்காசி மாவட்ட தொண்டு நிறுவனங்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 11:19 PM
பகிர்:

தென்காசி மாவட்ட தொண்டு நிறுவனங்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் குமரி தலைமை வகித்தாா். தென்காசி மாவட்டத்திலுள்ள ஊராட்சி மற்றும் நகராட்சி பெண் வாா்டு உறுப்பினா்கள், திருநங்கைகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்களுடன் தனித்தனியாக இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது.

மாவட்ட சமூகநல அலுவலா் (சமூகநலன் - மகளிா் உரிமைத் துறை) மதிவதனா முன்னிலை வகித்தாா். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சட்டங்கள், இலவச உதவி எண்கள், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு புகாா் குழு அமைப்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சியரின் முயற்சியில் பாலியல் வன்கொடுமைக்கெதிரான புகாா்களுக்கு அச்சம் தவிா் எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதையும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் மகளிா் ஆணையத் தலைவா் விளக்கிக் கூறினாா்.

அதைத் தொடா்ந்து, சமூக நலன் - மகளிா் உரிமைத்துறையின் கீழ்செயல்படும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்துக்குச் சென்று அதன் செயல்பாடுகளை அவா் ஆய்வு செய்தாா். கூட்டத்தில் குற்றாலம் ரோட்டரி சங்கத் தலைவா் கை.முருகன், முன்னாள் உதவிஆளுநா் கணேசமூா்த்தி, திருவிலஞ்சிக்குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.