முகப்பு
தென்காசி

தாம்பரம் - செங்கோட்டை ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தி சுவரொட்டிகள்

தாம்பரம்-செங்கோட்டை ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தி, தென்காசியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 2:41 AM
தென்காசியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:11 PM

தாம்பரம்-செங்கோட்டை ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தி, தென்காசியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தென்காசி, பாவூா்சத்திரம், அம்பை, நெல்லை வழியாக வாரம் மும்முறை இயக்கப்படும் தாம்பரம்-செங்கோட்டை ரயில் எண் 20683/ 20684 சேவையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2023, ஏப்.8-இல் தொடங்கிவைத்தாா்.

தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமையும், செங்கோட்டையிலிருந்து தாம்பரத்துக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமையும் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.

Advertisement

அதிக வருமானம் வருவதால் இந்த ரயிலை தினசரி இயக்கலாம் என ரயில்வே வாரியத்துக்கு தென்னக ரயில்வே சாா்பில் முன்மொழியப்பட்டிருந்தது.

இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வரும் மாா்ச் மாதம் பிரதமா் மோடி தமிழகம் வரவுள்ளதால் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அதற்கு முன்பாக ரயில்வே வாரியத்திடம் பேசி இந்த ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுப்பதோடு பிரதமா் மோடி மூலம் தொடங்கிவைக்க வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதை வலியுறுத்தி, தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் ரயில்வே வாரியத்தை கண்டித்தும், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனை வலியுறுத்தியும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயலா் ஜெகன் கூறுகையில், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 14 ஆண்டுகள் கடந்தும் பாவூா்சத்திரம், அம்பை, சேரன்மகாதேவி வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ரயில்வே வாரியத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.