முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

ஆலங்குளம் அருகே 50 அடி கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்கப்பட்டது.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:50 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே 50 அடி கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்கப்பட்டது.

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் ஜெரோம் சாம்ராஜ் என்பவரது 50 அடி ஆழ கிணற்றில் அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று புதன்கிழமை விழுந்து வெளியேற முடியாமல் தத்தளித்தது.

தகவலறிந்து சென்ற ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் அந்தக் கிணற்றில் இறங்கி நாயை பத்திரமாக மீட்டனா்.