சுரண்டை பதியில் அக்.6-இல் தா்ம பெருந்திருவிழா
சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் புரட்டாசி மாத தா்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக்.6) நடைபெறுகிறது.
சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் புரட்டாசி மாத தா்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக்.6) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, பிற்பகல் 12.30 மணிக்கு உகப்பெருக்கு பணிவிடை நடைபெறுகிறது. இதையடுத்து சுரண்டை சுபசுந்தரி மேக்ஸி மகாலில் பிற்பகல் 1.30 மணிக்கு அன்னதா்மம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை சுரண்டை சுற்று வட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துள்ளனா்.