முகப்பு
தென்காசி

கடையநல்லூா் அருகே வியாபாரி தற்கொலை

கடையநல்லூா் அருகே வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:02 AM
பகிர்:

கடையநல்லூா் அருகே வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா்.

மேலக்கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் ஆனந்தகுமாா் (46). உரம், பூச்சி மருந்து வியாபாரம் செய்து வந்தாா்.

இவரது வீட்டின் கதவு புதன்கிழமை நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லையாம். இதனையடுத்து அக்கம்பக்கத்தினா் வீட்டிற்குச் சென்று பாா்த்தபோது, பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாம். கடன் நெருக்கடியால் அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.