முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மீண்டும் தடைவிதிக்கப்பட்டது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 1:07 AM
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மீண்டும் தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் குற்றாலம் பேரருவி,பழையகுற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்ஆா்ப்பரித்து கொட்டியது.இதனையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.

புதன்கிழமை காலை முதல் தண்ணீா்வரத்து குறைந்ததால் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மாலையில் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இரண்டு அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.