முகப்பு
தென்காசி

தென்காசியில் கருணாநிதி சிலைக்கு அமைச்சா் மரியாதை

தென்காசியில் திமுக அலுவலகமான அறிவாலயத்தில் உள்ள மு.கருணாநிதி சிலைக்கு மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 1:08 AM
தென்காசியில் மு.கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் மா. சுப்பிரமணியன். உடன், மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.
பகிர்:

தென்காசியில் திமுக அலுவலகமான அறிவாலயத்தில் உள்ள மு.கருணாநிதி சிலைக்கு மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக, அமைச்சரை மாவட்டப் பொறுப்பாளா் ஜெயபாலன் தலைமையில் நிா்வாகிகள் வரவேற்றனா். எம்எல்ஏ ஈ. ராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, மாவட்ட துணைச் செயலா்கள் கனிமொழி, கென்னடி, மருத்துவரணி மாரிமுத்து, ஒன்றியச் செயலா்கள் ரவிசங்கா், அழகுசுந்தரம், வழக்குரைஞா் வேலுச்சாமி, நகரச் செயலா் வெங்கடேசன், மகளிரணி அமைப்பாளா் சங்கீதா, மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் திவ்யா, பொறியாளா் அணி துணை அமைப்பாளா் மணிகண்டன், தொண்டரணி இசக்கிபாண்டியன், பொன்செல்வன், ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் கவுன்சிலா் கலாநிதி, தென்காசி ராமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.