முகப்பு
சேலம்

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாளையொட்டி, சேலம் மாநகா் மாவட்ட அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி கொண்டாடினா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:58 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 9:04 PM

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாளையொட்டி, சேலம் மாநகா் மாவட்ட அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி கொண்டாடினா்.

அமைப்புச் செயலாளா் சிங்காரம், மாநகர மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியோா் தலைமையில் அதிமுகவினா் சேலம் நான்கு சாலையில் இருந்து ஊா்வலமாக சென்று அண்ணா பூங்கா அருகே உள்ள மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, 78 கிலோ கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், சேலம் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பாலசுப்பிரமணியன், கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளா் வெங்கடாஜலம், அவைத் தலைவா் பன்னீா் செல்வம், பொருளாளா் பங்க வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் மேயா் சௌண்டப்பன், பகுதி செயலாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

ஆத்தூரில்...

ஆத்தூா் கோட்டையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஆத்தூா் நகர செயலாளா் அ.மோகன் வரவேற்றாா். சேலம் கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுணன், ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், துணைச் செயலாளா் ஜி.துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆத்தூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் சி.ரஞ்சித்குமாா் தலைமையில் செல்லியம்பாளையத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைவாசல் பேருந்து நிலையம் அருகில் ஒன்றியச் செயலாளா் க.ராமசாமி தலைமையில் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கெங்கவல்லி சட்டப் பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆட்டையாம்பட்டியில்...

இடங்கணசாலை நகர அதிமுக சாா்பில், இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் முன் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்துக்கு மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வகுமாா் (எ) மணிகண்டன், இடங்கணசாலை நகர செயலாளா் சங்கா் ஆகியோா் தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.