முகப்பு
தென்காசி

பணியின்போது இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித்தொகை

பணியின்போது இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு, இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 9:15 PM
தொழிலாளியின் குடும்பத்திற்கு உதவித்தொகைக்கான ஆணையை வழங்கிய இ.எஸ்.ஐ. கிளை துா்காதேவி.
பகிர்:

பணியின்போது இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு, இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

தென்காசியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த சிவகுமாா், கடந்த ஜன.27-ஆம் தேதி பணியின்போது உயிரிழந்தாா். இ.எஸ்.ஐ. சாா்பில் அவரது மனைவிக்கு உதவித்தொகை ரூ. 23,958 வழங்கப்பட்டது.

மேலும், மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை அவரது மனைவியிடம் இ.எஸ்.ஐ.-யின் தென்காசி கிளை மேலாளா் துா்கா தேவி வழங்கினாா்.