முகப்பு
பலி
கோயம்புத்தூர்

கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமானப் பணியின்போது ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோயம்புத்தூர்

கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமானப் பணியின்போது ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 3 மார்ச், 2026 at 8:20 PM
பலி
பகிர்:

கட்டுமானப் பணியின்போது ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், பாண்டியன் நகா் அருகே உள்ள ஸ்ரீநகா் முதலாவது வீதியைச் சோ்ந்தவா் சதீஷ் (40). இவரது மனைவி புவனேஸ்வரி.

கட்டடத் தொழிலாளியான சதீஷ், கடந்த சில நாள்களாக கோவை, ஒண்டிப்புதூா் அருகே சாம் அவென்யூவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெறும் கட்டடப் பணியில் வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அங்கு ஏணியில் நின்றவாறு சதீஷ் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தாா். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிங்கநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →