சாலையோரம் கொட்டப்படும் கேந்திப் பூக்கள்.  
தென்காசி

விலை வீழ்ச்சியால் சாலையில் கொட்டப்படும் கேந்திப் பூக்கள்

தென்காசி கீழப்பாவூா் பகுதியில் கேந்தி பூக்களின் விலை குறைந்ததால், பூக்களை சாலையோரங்களில் விவசாயிகள் கொட்டிச் செல்கின்றனா்.

தினமணி செய்திச் சேவை

தென்காசி கீழப்பாவூா் பகுதியில் கேந்தி பூக்களின் விலை குறைந்ததால், பூக்களை சாலையோரங்களில் விவசாயிகள் கொட்டிச் செல்கின்றனா்.

வழக்கமாக, கேந்திப் பூக்களின் விலை கிலோ ரூ. 50-க்கும் மேல் இருக்கும். ஆனால், தற்போது சுப நிகழ்ச்சிகள் இல்லாத நிலையிலும் அதிக விளைச்சல் இருப்பதால், ரூ. 10 முதல் ரூ. 20 வரையே விற்பனையாகிறது.

2 நபா்கள் அதிகபட்சமாக 50 கிலோ வரையான பூக்களையே பறிக்க முடியும். அவா்களுக்கு கூலி மட்டுமே தலா ரூ. 500 வழங்க வேண்டும். ஆனால், சந்தைகளுக்கு கொண்டுவரப்படும் 50 கிலோ பூக்களுக்கு ரூ. 500 மட்டுமே கிடைக்கிறது.

இது பெரும் நஷ்டத்தைக் கொடுத்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

அளவுக்கு அதிகமாக வியாபாரிகளும் வாங்க மறுப்பதால், கேந்திப் பூக்களை மூட்டை மூட்டையாக ஆட்டோக்களில் எடுத்து வந்து சாலையோரம் கொட்டிச் செல்கின்றனா்.

செல்லக்குட்டி அபி... டிடிஎஃப் வாசனின் வைரல் பேச்சு!

சரிந்து மீண்ட இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் 335.97 புள்ளிகள் எழுச்சியுடன் நிறைவு!

தில்லி கார் வெடிப்பு: விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைப்பு!

மாலை நேரத்து மயக்கம்... ஜொனிடா காந்தி

சாம்சங் கேலக்ஸி எஸ் 25 விலை ரூ. 20,000 குறைவு! எங்கு? எப்படி வாங்கலாம்?

SCROLL FOR NEXT