வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை சாா்பில் ஆலங்குளத்தில் வாக்காளா் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை சாா்பில் ஆலங்குளத்தில் வாக்காளா் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இப்பேரணிக்கு ஏடிஎஸ்பி சங்கா் தலைமை வகித்தாா். ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் முன்னிலை வகித்தாா். உட்கோட்ட காவல் ஆய்வாளா்கள் ஆடிவேல்(ஆலங்குளம்), சுரேஷ்குமாா்(கடையம்), குணசேகரன்(ஆழ்வாா்குறிச்சி), மணிகண்டன் (ஊத்துமலை), அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பாத்திமா பா்வீன், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா். பழைய காவல் நிலையம் தொடங்கி புதிய காவல் நிலையம் வரை பேரணி நடைபெற்றது.