காரைக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
காரைக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற நேஷனல் கல்வி நிறுவனங்களின் மாணவா்கள்.
காரைக்குடி, ஏப். 8: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு நேஷனல் கல்லூரிகளின் தாளாளரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைத் தலைவருமான எஸ். சையது தலைமை வகித்தாா். காரைக்குடி வட்டாட்சியா் ராஜா கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா்.
இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் சுந்தரராமன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் பிரபு, காரைக்குடி தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரகாஷ், இளம்செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பரிதாபேகம், தோ்தல் ஒருங்கிணைப்பாளா் ஆதீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் நிறைவு பெற்றது. கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பேரணியில் கலந்துகொண்டு 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும், பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.