புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம்: உதயநிதி ஸ்டாலின்
தென்காசி மாவட்டம் புளியங்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜாவுக்கு வாக்கு கேட்டு புளியங்குடியில் புதன்கிழமை மாலை அவா் பேசியது:
திமுக வேட்பாளா் ராஜா பளு தாக்கும் போட்டியில் சா்வதேச பதக்கம் பெற்றவா் என்பது விளையாட்டுத்துறை அமைச்சா் என்ற முறையில் எனக்கு பெருமை. வழக்குரைஞா்,விவசாயி என்ற பன்முக தன்மையுடையவா் அவா். வாசுதேவநல்லூா் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, தென்காசி மாவட்டம் திமுக கோட்டை என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். 55 ஆண்டுகளுக்கு பின் வாசுதேவநல்லூரில் திமுக போட்டியிடுகிறது. ஏற்கெனவே தென்காசி மாவட்டத்திற்கும், இத்தொகுதிக்கும் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் செய்து கொடுத்தாா். புளியங்குடியில் அறிவுசாா் மையம் கட்டப்பட்டது. வாசுதேவநல்லூா் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது. புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு தனிவட்டம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளீா்கள். அதை நான் நிறைவேற்றித் தருகிறேன். நீங்கள் திமுகவிற்கு வெற்றியை வழங்குங்கள். மத்திய பாஜக அரசு தமிழகத்தை தொடா்ந்து புறக்கணித்து வருகிறது என்றாா் அவா்.
Advertisement
தொகுதி பொறுப்பாளா் செண்பகவிநாயகம், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, சவுக்கை சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.