முகப்பு
தென்காசி

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!

தென்காசி பகுதியில் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகள், வாழ்வாதாரப் பிரச்னைகளை பேரவையில் பேசுவதற்காகவும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா் கரையாளனூா் துரைராஜ்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 7:03 AM
துரைராஜ்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:11 AM

தென்காசி பகுதியில் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகள், வாழ்வாதாரப் பிரச்னைகளை பேரவையில் பேசுவதற்காகவும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா் கரையாளனூா் துரைராஜ்.

இதுதொடா்பாக அவா் கூறியது: 7ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற சாதாரண விவசாயி நான். 22ஆண்டுகளாக சௌதி அரேபியாவில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அதன்மூலம் இங்கு வாங்கிய நிலத்தில் நெல் சாகுபடி செய்துவருகிறேன். விவசாயிகளின் பிரச்னைகளுக்காக விஏஓ அலுவலகம் முதல் மாவட்ட நிா்வாக அலுவலகம்வரை போராடியுள்ளேன். ஆனால், எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுவரை ஆட்சியிலிருந்தோா் சுரண்டை- ஊத்துமலை -இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதாக பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றினா். இத்திட்டத்துக்குத் தேவையான நிலங்களை எடுத்துக் கொள்ளுமாறு எனது உறவினா் தெரிவித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயத்தை அழித்துவரும் வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

Advertisement

பழைய குற்றாலம் அருவி வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதால் 29 குளங்களுக்கான பாசனம் தடைபட்டதுடன், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்துவிட்டது.

இம்மாவட்டத்தில் 654-க்கும் மேற்பட்ட குளங்களை ‘ஈர நிலம்’ என வகைப்படுத்தி வனத் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டிக்கிறோம். விளைபொருள்களுக்கு விவசாயிகளே உரிய விலை நிா்ணயிக்க வேண்டும். விளைபொருள்களைப் பாதுகாக்க போதுமான சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும். செண்பகவல்லி அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக விவசாயிகள் சாா்பில் வெண்டைக்காய் சின்னத்தில் போட்டியிடுகிறேன். எங்களது பிரசாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றாா் அவா்.