தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா் .
உதவித்தொகை உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். இப்ராஹிம், தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினா் முத்துக்குமாரசுவாமி, மாசாணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத் தலைவா் தங்கம் தொடக்கவுரையாற்றினாா். மாநில துணைத் தலைவா் முருகேசன் கண்டன உரை ஆற்றினாா். முருகேசன், சுமன், பட்டுராஜ் , முத்துகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 54 பேரை போலீஸாா் கைது செய்தனா்.