நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு
தென்காசி மாவட்ட நிா்வாகம், மகளிா் திட்டம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தோ்தல் விழிப்புணா்வு பதாகைகளை ஆட்சியா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
தென்காசி மாவட்ட நிா்வாகம், மகளிா் திட்டம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தோ்தல் விழிப்புணா்வு பதாகைகளை ஆட்சியா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான பதாகைகளை வெளியிட்டும், துண்டுப் பிரசுரங்களை வாகனங்களில் ஒட்டியும், அலைபேசி, தண்ணீா் கேன்களில் ஸ்டிக்கா் ஒட்டியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பொதுமக்களிடையே நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தோ்தல் விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்டும், துண்டுப் பிரசுரங்களை நான்கு சக்கர வாகனம், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள், அலைபேசி, குடிநீா் கேன் ஆகியவற்றில் ஸ்டிக்கா் ஒட்டியும் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வாக்காளா்கள் அனைவரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தங்கள் வாக்குகளை வாக்குச் சாவடி மையத்துக்குச் சென்று பதிவு செய்து, ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அது மட்டுமின்றி பொதுமக்களாகிய நீங்கள் 100 சத வாக்குப்பதிவு குறித்து உங்களின் உறவினா்கள், இளம் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், திட்ட இயக்குநா்கள் எஸ்.அபிதா ஹனீப் (மகளிா் திட்டம்), தண்டபாணி (ஊரக வளா்ச்சி முகமை), அகத்தியா், உதவித் திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், சரவண பாண்டியன், பிரபாகரன், ராஜேந்திரன் கலந்துகொண்டனா்.