முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 95.60 % போ் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுதோ்வில் தென்காசி மாவட்டம் 95.60 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

Updated On : 21 மே 2026, 5:53 am IST
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுதோ்வில் தென்காசி மாவட்டம் 95.60 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இதுதொடா்பாக, தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா வெளியிட்ட செய்திக்குறிப்பு.

தென்காசி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 226 பள்ளிகளைச் சாா்ந்த 8,865 மாணவா்களும் , 9,303 மாணவிகளுமாக மொத்தம் 18,168 போ் தோ்வு எழுதியிருந்தனா். தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. அதில், 8,284 மாணவா்களும், 9,084 மாணவிகளுமாக 17,368 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இதன் மூலம் இம்மாவட்டம் 95.60 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 16 ஆம் இடம் பிடித்துள்ளது.

21 அரசுப்பள்ளிகள் உள்பட மொத்தம் 93 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன என்றாா் அவா்.