திருநெல்வேலி

8 வட்டங்களில் இன்று அம்மா திட்ட முகாம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 8 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.8) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி வட்டத்துக்கு வேளார்குளம், ராதாபுரத்துக்கு வேப்பிலான் குளம்-1, அம்பாசமுத்திரத்துக்கு மேல அம்பாசமுத்திரம், நான்குனேரிக்கு கீழக்கருவேலன்குளம்,  ஆலங்குளத்துக்கு கீழப்பாவூர்-2, பாளையங்கோட்டைக்கு பாளையஞ்செட்டிகுளம், சங்கரன்கோவிலுக்கு பந்தபுளி, திருவேங்கடத்துக்கு மதுராபுரி, அ.மதுராபுரி ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமின்போது இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், நிலத் தாவாக்கள், சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT