திருநெல்வேலி

பாளை.யில் காப்பீடு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களின் பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டையில் காப்பீடு ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும்,  காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,   திருநெல்வேலி கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டையிலுள்ள கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் கிளைச் செயலர் என். கண்ணன் என்ற நாராயணசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை அமைப்பின் கோட்டப் பொதுச்செயலர் செ. முத்துகுமாரசுவாமி தொடங்கி வைத்தார்.
அமைப்பின் துணைத் தலைவர்கள் பட்டன்,  முத்தையா,  துரைராஜ், துணைச் செயலர் ஆர்.எஸ். செண்பகம் உள்பட 100- க்கும் மேற்பட்ட காப்பீடு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT