பாளை.யில் நூல் வெளியீடு
பாளையங்கோட்டையில் உள்ள மாநில தமிழ்ச் சங்கத்தில் "திருக்குறளும் திரைப்படமும்' என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள மாநில தமிழ்ச் சங்கத்தில் "திருக்குறளும் திரைப்படமும்' என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு உலகத் திருக்குறள் தகவல் மையத் தலைவர் பேராசிரியர் பா.வளன்அரசு தலைமை வகித்தார். முனைவர் செ.பிரமசக்தி இறைவாழ்த்துப் பாடினார். தனித்தமிழ் இலக்கியக் கழகச் செயலர் க.ஞா.சாண்பீற்றர் வரவேற்றார். அருணா சிவாஜி நூலை வெளியிட, திருக்குறள் பி.சுந்தரம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். "திருக்குறளில் நன்றியறிதல்' என்ற தலைப்பில் கம்பன் கழகச் செயலர் பொன்.வேலுமயில் பேசினார். நூலாசிரியர் விவேகானந்த பாசுகர் ஏற்புரையாற்றினார். பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி, சொ.முத்துசாமி, நா.உசாதேவி, வி.பாப்பையா, ராசகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.