பாவூர்சத்திரம் சந்தையில் மிளகாய் விலை உயர்வு
பாவூர்சத்திரம் காய்கனி சந்தையில் மிளகாய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாவூர்சத்திரம் காய்கனி சந்தையில் மிளகாய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாவூர்சத்திரம் காமராஜர் காய்கனி சந்தைக்கு கீழப்பாவூர், சுரண்டை, ஆலங்குளம், மானூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மிளகாய் விற்பனைக்கு வரும். கடந்த சில வாரங்களாக மைசூர் மற்றும் தமிழகத்தின் ஓசூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து மிளகாய் வரத்து அதிகமாக இருந்ததால் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையானது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக வெளி மாவட்ட சந்தையில் இருந்து வரத்து குறைந்ததாலும், கீழப்பாவூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் குறைந்த அளவே அதாவது 1 டன் முதல் 3 டன் அளவே விற்பனைக்கு வந்தததால் மிளகாய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை விற்கப்பட்டது.