சுந்தரனார் பல்கலை.யில் கலைப்போட்டிகள்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், அதன் பல்வேறு துறைகளுக்கு இடையேயான கலைப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், அதன் பல்வேறு துறைகளுக்கு இடையேயான கலைப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
வ.உ.சி. அரங்கில் நடைபெற்ற இப்போட்டிகளை, பல்கலை. பதிவாளர் சந்தோஷ்பாபு தொடங்கிவைத்தார். ஆட்சிமன்ற உறுப்பினர் மாதவ சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். நாட்டுப்புற நடனம், மேற்கத்திய குழு நடனம், குழுப்பாடல், வண்ண ஓவியம் தீட்டுதல், மெளன நாடகம், விளம்பரத்திறன் மேம்பாடு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் இளைஞர் நலத்துறை இயக்குநர் (பொ) முனைவர் வெளியப்பன், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் சங்கீதா, திருப்பதி வெங்கடேஷ், அருண்குமார், ஜிம்கி பிரகனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.