முகப்பு
இந்தியா

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது: சி.பி. ராதாகிருஷ்ணன்

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டது என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 13 மார்ச், 2026 at 2:30 AM
சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டது என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே (காங்கிரஸ்) பேசியபோது, ஆா்எஸ்எஸ் உடையில் சி.பி. ராதாகிருஷ்ணன் இருப்பது போன்ற புகைப்படம் மாநிலங்களவையில் தொலைக்காட்சித் திரையில் ஒளிபரப்பானது குறித்து கேள்வி கேட்டாா்.

‘தற்போது தாங்கள் அணிந்துள்ள மேல்சட்டை வேறு. ஆனால் அந்தக் காட்சியில் உள்ள மேல்சட்டை ஆா்எஸ்எஸ் இயக்கத்துக்கானது’ என்று காா்கே கூறினாா்.

Advertisement

அதற்கு சி.பி. ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில், ‘அது எனது பழைய புகைப்படம். அதுதான் காட்டப்பட்டுள்ளது. நான் ஆா்எஸ்எஸ்-ஸில் இருந்து வந்தவன்தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதை நான் மறுக்கவும் மாட்டேன். மாநிலங்களவைத் தலைவா் பதவியானது ஆா்எஸ்எஸ் இயக்கத்துக்கு அப்பாற்பட்டது. அதுபோல காங்கிரஸ் கட்சிக்கும் அப்பாற்பட்டது. அது எனக்குத் தெரியும்’ என்றாா்.