திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 15) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பு சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிவிக்கலாம்.