நெல்லையில் கண்காணிப்புக்குழு கூட்டம்
திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் கே.ஆகாஷ், திருநெல்வேலி கோட்டாட்சியர் இல. மைதிலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்சக்திகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், அரசு சிறப்பு வழக்குரைஞர், வருவாய் வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர்கள், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.