மேலப்பாளையம் கன்னிமார் குளத்தை சுத்தப்படுத்திய அண்ணா பல்கலை. மாணவர்கள்
மேலப்பாளையத்தில் உள்ள கன்னிமார்குளத்தை அண்ணா பல்கலைக்கழக (திருநெல்வேலி மண்டலம்) நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் புதன்கிழமை சுத்தம் செய்தனர்.
மேலப்பாளையத்தில் உள்ள கன்னிமார்குளத்தை அண்ணா பல்கலைக்கழக (திருநெல்வேலி மண்டலம்) நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் புதன்கிழமை சுத்தம் செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழகம் (திருநெல்வேலி மண்டலம்) சார்பில் சிறப்பு நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மேலப்பாளையத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னிமார்குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்தப் பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி புதன்கிழமை பார்வையிட்டு, குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவர்களை பாராட்டினார். பின்னர் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், குளத்தின் கரைகளை மேம்படுத்தும் பணியில் மாணவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அண்ணா பல்கலைக்கழக டீன் (திருநெல்வேலி மண்டலம்) ஜி.சக்திநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பழனி, மாநகர நல அலுவலர் பொற்செல்வன், நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி கோல்டன் ஜூலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.