நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவுக் கூட்டம்ஸ்
எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவுக் கூட்டம் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் நீதிபதி ராஜேந்திர சச்சார் நினைவுக் கூட்டம் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் கே.ஹயாத் முகம்மது தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி வரவேற்றார். வழக்குரைஞர்கள் ரமேஷ், பிரிட்டோ, தெ.பீட்டர் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக் பேசியது: நீதிபதியாக மட்டுமன்றி சமூக செயல்பாட்டாளராகவும் திகழ்ந்த நீதிபதி ராஜேந்திர சச்சார், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மறைந்தார். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். அரசாங்கத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவதே அவருக்கு அஞ்சலி செலுத்தும் சிறந்த வழியாக இருக்கும் என்றார்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர்கள் கே.எஸ்.சாகுல் உஸ்மானி, செய்யது அகமது சலபி, மாவட்டச் செயலர் கே.சேக் மஜித், மாவட்டப் பொருளாளர் எல்.சேக் சாலி, அலாவுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.