முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மே 24இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 22 மே, 2018 at 4:46 AM
பகிர்:

திருநெல்வேலியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோருக்கு ஏற்படும் காலதாமதம், முறைகேடுகள் உள்ளிட்ட குறைகளைத் தீர்க்கும் வகையில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மே 24 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் எரிவாயு நுகர்வோர் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.