முகப்பு
திருநெல்வேலி

பெண்ணிடம் நகை பறிப்பு

பாளையங்கோட்டை அருகே கடையில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 மே, 2018 at 7:38 AM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே கடையில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி.  நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (50). இவர், தனது வீட்டின் முன்புறம் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். ஆனந்தராஜ் வெளியே சென்ற நேரத்தில் கடையில் அவரது மனைவி அமராவதி வியாபாரத்தை கவனித்து வந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், பொருள்கள் வாங்குவது போன்று அமராவதியிடம் பேச்சு கொடுத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அமராவதி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர். இது குறித்த  புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.