முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூரில் மனைவி அடித்து கொலை: கணவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் நரிக்குறவர் காலனியில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 22 மே, 2018 at 4:44 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் நரிக்குறவர் காலனியில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
வள்ளியூர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி கெüசல்யா (20).
இவர்கள் ஊர்ஊராகச் சென்று ஊசி, பாசி வியாபாரம் செய்து வந்தனர்.
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பாசி, ஊசி வியாபாரம் செய்தபோது, முத்துராஜ் வியாபாரம் செய்த பணத்தை மனைவியிடம் கொடுக்காமல், வீணாக செலவு செய்தாராம்.
இதை அவரது மனைவி கெüசல்யா தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த முத்துராஜ் மனைவியை அடித்துக் கொலை செய்தாராம்.
பிறகு, மனைவியின் சடலத்தை பாரம் ஏற்றும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வள்ளியூர் நரிக்குறவர் காலனிக்கு வந்துள்ளார்.
அங்கு மனைவியின் சடலத்தை இறக்குவதைப் பார்த்த நரிக்குறவர்கள் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் அங்கு சென்று முத்துராஜை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.