திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே விபத்து: காவலர் சாவு

DIN

கங்கைகொண்டான் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த காவலர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அன்னைதெரசா நகரைச் சேர்ந்தவர் முருகேஷ் ஸ்ரீதர் (29). இவர், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை பணி முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாராம். கங்கைகொண்டான் அருகே துறையூர் பகுதியில் சென்றபோது பாலத்தில் மோதி மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் முருகேஷ் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT