திருநெல்வேலி

தென்காசி அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

தென்காசி அருகே வாகனத் தணிக்கையில் 700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட உணவு தடுப்புப் பிரிவு போலீஸார், காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையில் தென்காசி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சுமை ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் தலா 50 கிலோ எடையுள்ள 14 மூட்டை ரேஷன் அரிசி கொண்டு சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து, சுமை ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸார், ரேஷன் அரிசியை கடத்தியதாக தென்காசி ஆய்க்குடியை சேர்ந்த சுமை ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த்தை(24) கைது செய்தனர். பறிமுதல் செய்த அரிசி நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT