திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்

DIN

மேலப்பாளையத்தில் தமுமுக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டையில் நடைபெற்ற ஊர்வலத்தில் பிரச்னையை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அங்கு, பொது அமைதியை பாதுகாக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமுமுக மாவட்டத் தலைவர் கே.எஸ். ரசூல்மைதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ. பிலால், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் ஜமால், பொருளாளர் சுல்தான், மாவட்ட துணைச் செயலர் பேட்டை ஷேக்,  நிர்வாகிகள் அஜிஸ், யாசின், ரசூல், வழக்குரைஞர் நிஜாம், மருத்துவரணி நிர்வாகி கனி, தொண்டரணி நிர்வாகி ரசூல், அ. காஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT