திருநெல்வேலி

ஆலங்குளத்தில் கோடை மழை

DIN

ஆலங்குளத்தில் புதன்கிழமை பிற்பகல் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. கடுமையான வெப்பத்தால் ஆலங்குளம் பகுதியில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள் உள்பட பெரும்பாலானோர் வெப்பத்தால் ஏற்படும் உபாதைகளால் அவதியடைந்தனர். 
கால்நடைகளும் மேய்ச்சலுக்கு செல்ல முடியாத நிலையில் பரிதவித்ததை காண முடிந்தது.  இதனிடையே, புதன்கிழமை பிற்பகலில் ஆலங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. கோடை மழையால் பொதுமக்கள், கால்நடைகள் வளர்ப்போர் மகிழ்ச்சி தெரிவித்தனர். மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT