திருநெல்வேலி

சுரண்டையில் கோடை மழை நீடிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

சுரண்டை பகுதியில் பெய்து வரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
சுரண்டை வட்டாரத்தில் நெல் சாகுபடிக்கு பிந்தைய சாகுபடியாக தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை போன்ற காய்கனிகளும், சோளம், கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சுரண்டை பெரியகுளம், சுந்தரபாண்டியபுரம் பட்டர்குளம், சுரண்டை இரட்டைகுளங்களில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில் சுரண்டை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் பெய்து வரும் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT