திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் சிற்றுந்துக்குள் புகுந்து அரிவாளைக் காட்டி மிரட்டியதாக 3 இளைஞர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி நகரத்தில் இருந்து சுத்தமல்லிக்கு சிற்றுந்து வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 14 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனாராம். பாரதி நகர் பள்ளிவாசல் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய 3 இளைஞர்கள் ஆயுதங்களுடன் பேருந்துக்குள் புகுந்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் சுத்தமல்லி போலீஸார் வழக்குப்பதிந்து சுத்தமல்லியைச் சேர்ந்த கசமாடன் மகன்கள் அனுக்குமார் (28), அவரது சகோதரர் அஜய் குமார் (26), அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் மூக்காண்டி (26) ஆகியோரை கைது செய்தனர்.