திருநெல்வேலி

அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித் தவசு தெப்ப உற்சவம்

DIN

அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன்கோவில் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத  அருள்மிகு சங்கரலிங்க சுவாமி திருக் கோயிலில் ஆடித்தவசு    தெப்ப உற்சவம் புதன்கிழமை நடை பெற்றது. 
 இக்கோயிலில் ஆக. 3 ஆம் தேதி ஆடித் தவசு திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தொடர்ந்து, ஆக. 12இல் காலை 9 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 7.30 மணிக்கு இடப வாகனத்தில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றன. ஆக. 13இல் காலை 4.30 மணிக்கு அபிஷேகம், தீபாரா தனையை தொடர்ந்து வெள்ளிச் சப்பரத்தில் அம்பாள் தவசுக்கு எழுந்தருளலும், மாலை 6 மணிக்கு சங்கரநாராயணர் தவசுக் காட்சியும்,  சங்கரலிங்க சுவாமி அம்பாளுக்கு இடப வாகனத்தில் காட்சி  தரிசனமும், இரவு 9 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 புதன்கிழமை சங்கரலிங்க சுவாமி கோமதியம்பாள் தெப்பத் திருவிழா நடைபெற்றது. மாலையில் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சுவாமி- அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளினர். பின்னர், வேதபாராயணங்கள் முழங்க தெப்பத்தில் 11 சுற்று வலம் வந்தனர். விழாவில்  திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  வியாழக்கிழமை (ஆக. 15)  இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்பத் திருவிழாவும், சுவாமி-அம்பாள் வீதிவுலாவும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT