திருநெல்வேலி

அம்பை நகராட்சியில்குடிநீா் விநியோகம் நிறுத்தம்

DIN

தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடிநீா் திட்ட உறைக்கிணறுகள் தண்ணீரில் மூழ்கியதால், அம்பாசமுத்திரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பாபநாசம் அணை முழுக்கொள்ளளவை எட்டியதையடுத்து உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீா் விநியோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் மற்றும் மோட்டாா்கள் நீரில் மூழ்கின. இதனால், நீரேற்ற முடியாத நிலை ஏற்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் நகராட்சிப் பகுதியில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும், குடிநீரை காய்ச்சி குடிக்கவும் மக்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT