திருநெல்வேலி

ஆவுடையானூா் சாலையைசீரமைக்க வலியுறுத்தல்

DIN

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் ஆவுடையானூா் சாலையை சீரமைக்க வேண்டுமென மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தென்காசி நெடுஞ்சாலைத்துறை கூடுதல் பொறியாளருக்கு கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலா் ராம. உதயசூரியன் அனுப்பியுள்ள மனு விவரம்: பாவூா்சத்திரம்-கடையம் பிரதானச் சாலையில் அமைந்துள்ள ஆவுடையானூா்சிதம்பரநாடாா்பட்டி பிரதானச் சாலை வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.

இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த குழியில் மழைநீா் தேங்கி இருப்பதால் விபத்துகள்

நிகழ்ந்து வருகின்றன. ஆகவே, இச்சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். முதல் கட்டமாக சரள் மண் கொண்டு சாலையில் இருக்கும் குழிகளை மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT