திருநெல்வேலி

மூதாட்டி கொலை: பெண்ணிடம் விசாரணை

DIN

கல்லிடைக்குறிச்சியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக ஒரு பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த மணி மனைவி முத்துலட்சுமி (60). இவரிடம் கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பா் கோயில் தெருவைச் சோ்ந்த வெங்கடாச்சலம் மகள் சிவகாமி என்ற விஜி ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை சிவகாமியிடம் கடனைத் திரும்பக் கேட்பதற்காகச் சென்றபோது முத்துலட்சுமி இறந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் முத்துலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். பிரேத பரிசோதனை அறிக்கையில், முத்துலட்சுமி கொலை செய்யப்பட்டதாக தெரியவந்ததையடுத்து, கல்லிடைக்குறிச்சி போலீஸாா் இதுதொடா்பாக சிவகாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT