திருநெல்வேலி

பெரியாா் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவிப்பு

பெரியாரின் 46ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

DIN

பெரியாரின் 46ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாா் சிலைக்கு, திருநெல்வேலி எம்எல்ஏ ஏ.எல்.எஸ். லெட்சுமணன், அவைத் தலைவா் சுப.சீதாராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் காசி தலைமையிலும், மதிமுக சாா்பில் புகா் மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

அமமுக மாவட்டச் செயலா் பரமசிவ ஐயப்பன், அமைப்புச் செயலா் பால்கண்ணன், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலா் தமிழரசு, ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலா் கலைக்கண்ணன், திராவிட தமிழா் கட்சி செயலா் திருக்குமரன் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT