திருநெல்வேலி

உலகத் திறனாய்வு போட்டிகள்: 624 மாணவர்கள் பங்கேற்பு

DIN

பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி கல்வி மாவட்ட அளவிலான உலகத்திறனாய்வுப் போட்டியில் 624 மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ்,  கல்வி மாவட்ட அளவில் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி கல்வி மாவட்டப் போட்டிகளில் 31 பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 258 பேர், மாணவர்கள் 366 பேர் என மொத்தம் 624 பேர் பங்கேற்றனர். 
இப்போட்டியினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலலர் அ.ஜெயசித்ரா தொடங்கி வகித்தார். நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் பிலீப் மற்றும் குமார், காயிதமில்லத் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஜாய்மரகதம், பால்பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT