திருநெல்வேலி

ஆரியங்காவு வனப் பகுதியில் தீ

DIN

தமிழக -கேரள மாநிலங்களின் எல்லையான  ஆரியங்காவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வனப்பகுதிக்குள் ஏற்பட்ட காட்டுத் தீயில் அரிய வகை மரங்கள் எரிந்து சேதமடைந்தன. 
 வனப்பகுதியில் தேக்கு மரங்கள் அடந்துள்ள பகுதிக்கு வேகமாக தீ பரவியதில், மலை உச்சிவரை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.   தீயை அணைக்கும் பணியில் கேரள வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி ஆரியங்காவு தர்ப்பகுளம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால்  அரிய வகை மரங்கள் எரிந்து நாசமாகின. தற்போதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயின் உக்கிரத்துக்கு காடுகளில் வாழும் அணில், சிறுத்தை, காட்டுப்பன்றி, மிளா, உடும்பு  உள்ளிட்ட விலங்கினங்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT