திருநெல்வேலி

நெல்லையில் ரேஷன் கடை முற்றுகை

DIN

திருநெல்வேலி நகரத்தில் ரேஷன் கடையை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
திருநெல்வேலி நகரம்,  காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பைப் பெற குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர்.  பிற்பகலில் நாள் ஒன்றுக்கு சுமார் 300 பேருக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கக் கூறியுள்ளதாகவும்,  அந்த அளவுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து    விநியோகத்தை ஊழியர்கள் நிறுத்தினர். இதற்கு பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.  காலை முதல் காத்திருக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கக் கோரி ரேஷன் கடை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு  தொகுப்பு முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT