திருநெல்வேலி

அமைப்புசாரா தொழிலாளர் வாரிய உறுப்பினர் சேர்க்கை: ஜன. 31இல் சிறப்பு முகாம்

DIN

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திற்கான உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் இம்மாதம் 31ஆம் தேதி ஆலங்குளத்தில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சி.மின்னல்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திற்கான உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் வரும் 31-ஆம் தேதி ஆலங்குளத்தில் உள்ள பேரூராட்சி திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.  விண்ணப்பதாரர் இரு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை,  தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம்  ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகலுடன் நேரில் வந்து  உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
மனுதாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்ய இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT