களக்காட்டில் திமுக சார்பில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாள்விழா, மாநில இளைஞரணிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு ஆகிய முப்பெரும் விழா மணிக்கூண்டு திடலில் நடைபெற்றது.
விழாவுக்கு, நகரச் செயலர் சே. சிவசங்கரன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர்கள் முத்தையா, ரவி, களக்காடு ஒன்றியச் செயலர் பி.சி. ராஜன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வகருணாநிதி, மாவட்ட துணைச்செயலர் எஸ்.ஏ.கே. சித்திக், திருக்குறுங்குடி நகரச் செயலர் கசமுத்து, ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் கனியப்பா, கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். நகர இளைஞரணி அமைப்பாளர் ஏசுதாசன் நன்றி கூறினார்.