திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 4,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெறுகிறது. தேசிய மக்கள்
நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர் அகமது தொடங்கி வைக்கிறார். இதில், மோட்டார் வாகன வழக்குகள், குடும்ப நல வழக்குகள்,
உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் என சுமார் 4,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எனவே பொதுமக்கள்,
வழக்காளர்கள் மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் தங்களின் வழக்குகளுக்கு சமரச வழி மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம்.